தண்ணீர்ப் பஞ்சத்தை தவிர்க்க பழைய மின்னஞ்சல்களை Delete செய்யுங்கள்: பிரித்தானியா கோரிக்கை!

பிரித்தானியாவில் தண்ணீர்ப் பஞ்சத்தை தவிர்க்கவேண்டுமா? உங்கள் பழைய மின்னஞ்சல்களை டெலீட் செய்யுங்கள் என வித்தியாசமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது பிரித்தானிய அரசு.

பிரித்தானியா நான்காவது வெப்ப அலையை எதிர்கொண்டுவருகிறது. இங்கிலாந்திலுள்ள ஐந்து இடங்களில் தற்போது வறட்சி நிலவுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தண்ணீர் பாதுகாப்புக்காக மக்கள் தங்கள் பங்கைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்கிறார் தண்ணீர் சுற்றுச்சூழல் இயக்குநரான ஹெலன் வேக்ஹாம்.

குழாயை சரியாக மூடுவது, பழைய மின்னஞ்சல்களை டெலீட் செய்வது போன்ற நீங்கள் செய்யும் சின்னச் சின்ன விடயங்கள் நமது நீர்நிலைகளின் நலனை பாதுகாக்கும் என்கிறார் அவர்.

அதாவது, மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் ஆகியவை தரவு மையங்களில் (data centers) சேமித்துவைக்கப்படும்.

இந்த தரவு மையங்களை சூடாகாமல் தவிர்க்க, அவற்றை குளிர்ச்சியாக வைக்க அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும்.

ஆகவேதான் தரவு மையங்கள் சூடாகாமல் தவிர்ப்பதற்காக, அவற்றை குளிர்விப்பதற்காக தண்ணீர் வீணாகாமல் தடுப்பதற்காக, பழைய மின்னஞ்சல்களை டெலீட் செய்யுமாறு பிரித்தானிய அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Trump and Netanyahu
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் தோற்றத்தை ஒத்த எருமைகள்: ஈர்க்கப்படும் மக்களின் கவனம்
Commander-in-Chief Admiral Professor Jayanath Kolambage
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் சீனாவின் ‘ஆயுத சூப்பர் மார்க்கெட் ’ ரகசியம்: முன்னாள் கடற்படை தளபதி வெளிப்படுத்திய உண்மைகள்!
Gajendrakumar Ponnambalam
மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி மும்மரமாக செயல்படுகிறது: கஜேந்திரகுமார் எம்.பி!
crime
பயணப்பொதியிலிருந்து 79 வயதுடைய மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
jaffna news
யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி