தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதம். ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் கோவில் கருவறை வரை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
அர்ச்சகர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், பக்தர்களின் கூட்டத்தை முறைப்படுத்தவும், இப்போது ‘தீர்த்தம் வழங்கும் இயந்திரங்கள்’ களமிறங்கியுள்ளன.

இந்த இயந்திரத்தின் சென்சார் அருகே உங்கள் உள்ளங்கையைக் காட்டினால் போதும், ஒரு சொட்டு கூட குறையாமல் துல்லியமாகத் தீர்த்தம் வந்து விழுகிறது.
‘டிஜிட்டல் தீர்த்தம்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த முறை, கூட்ட நெரிசலைக் குறைப்பதோடு சுகாதாரத்தையும் உறுதி செய்கிறது.
