🔴 VIDEO தாய்வான் அதிபர் மீது வாந்தி எடுத்த நிர்வாகி: பொது நிகழ்ச்சியில் பரபரப்பு!

தாய்வான் அதிபர் லாய் சிங்-தே (Lai Ching-te) கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி ஒன்றில், அருகில் நின்றிருந்த கோயில் நிர்வாகி ஒருவர் உடல்நலக்குறைவால் அவர் மீது வாந்தி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை காலை, தாய்வான் அதிபர் லாய் சிங்-தே, புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தைனான் (Tainan) நகரில் உள்ள ஒரு கோயிலில் பொதுமக்களுக்கு வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் வழங்கிக் கொண்டிருந்தார்

அப்போது அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த கோயில் நிர்வாகி லின் பெய்-ஹுவோ (Lin Pei-huo) என்பவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் தனது வாயை மூடிக்கொள்ள முயன்றபோதும், கட்டுப்பாடின்றி வாந்தி எடுத்தார். இதில் வாந்தி அதிபரின் இடது கைப் பகுதி மற்றும் ஆடையில் பட்டது.

இந்த எதிர்பாராத சம்பவத்தால் நிகழ்ச்சி சிறிது நேரம் தடைபட்டது. எனினும், அதிபர் லாய் சிங்-தே பதற்றமடையாமல், உடனடியாக அந்த நிர்வாகியின் உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்தார். அங்கிருந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்தனர்.

பின்னர் உரையாற்றிய அதிபர், அந்த நிர்வாகியின் குடும்பத்தில் சிலருக்கு ‘நோரோவைரஸ்’ (Norovirus) பாதிப்பு இருந்ததாகவும், அதன் காரணமாகவே அவருக்கு இந்த திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் விளக்கமளித்தார். தற்போது அந்த நிர்வாகி நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சற்று ஓய்வெடுத்த பிறகு அந்த நிர்வாகி மீண்டும் மேடைக்கு வந்த போதிலும், மற்றவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் ஓய்வெடுக்கச் சென்றார். அதிபர் தனது உடையைச் சுத்தம் செய்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilanka weather
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி: 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை!
gotabaya rajapaksa
கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!
electricity bill
மின் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
mahaweli river
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை: பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!
Mahara Prison
போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம்? மஹர சிறைச்சாலையில் ரூ.15 கோடி சேதம் — அதிர்ச்சி தகவல்கள்!
Pujith Jayasundara
"அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்": பொலிஸ் உயர்மட்ட 'வாட்ஸ்அப்' உரையாடலில் வெளிவந்த தகவல்!