முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்!

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, இன்று (18) காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் எதிர்ப்பு குழுவினால், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இடம்பெற்ற பண மோசடி தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சுகீஸ்வர பண்டார 2022ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றியுள்ளதுடன், அதே காலப்பகுதியில் அன்றைய ஜனாதிபதி செயலகத்தின் திட்டப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அந்த விசாரணைகளின் விளைவாக, ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் அவர் இரண்டு பதவிகளுக்கான சம்பளப் பணத்தைப் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், இன்று (18) கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் குறித்த பதவிகளை வகித்துக்கொண்டிருந்த போது, அரச வாகனங்களைத் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் அதன் ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பிலும் அந்தப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Namal and Mahinda
"18ஆவது திருத்தம் நாங்கள் செய்த தவறு; அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்!" - நாமல் ராஜபக்ச
police arrest
தெஹிவளை உணவகக் கொள்ளை: முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்குக் கடூழிய சிறை!
negombo prison
தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: நீர்கொழும்பு சிறை அதிகாரி சாட்சியத்தை வெளியிட நீதிமன்றம் தடை!
telegram
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
accident
A9 வீதியில் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி: இரு இளைஞர்களின் உயிரைப் பறித்த சோகம்!
pillayan
'பிள்ளையான்' தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு: விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு!