இலங்கையில் எரிபொருள் விநியோகத்தின் போது QR குறியீட்டை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு இறுதி முடிவு எட்டப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த வேகத்திற்கு இணையாக விலை குறையவில்லை என அதன் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு மேலும் எந்தவித தடைகளும் இல்லை என டி. ஜே. ராஜகருணா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
