வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை 600,000 லிருந்து 2 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்க கூறுகையில்,

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு மூலம் வெளிநாடு செல்லும் எந்தவொரு இலங்கை தொழிலாளிக்கும் இந்த இழப்பீடு பொருந்தும்.

ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு 5.2 பில்லியன் டாலர்களை அனுப்பியுள்ளனர் என்றும் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு இதுவரை சுமார் 220,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பணம் அனுப்புவது 7 பில்லியன் டொலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7.5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!