இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (23) இலங்கை வரவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

“அயல் நாட்டின் உறவுக்கு முதலிடம்” என்ற கொள்கையை வலியுறுத்தி, ‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பேரழிவை எதிர்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் ‘சாகர் பந்து’ நடவடிக்கையின் அடுத்தகட்ட பணிகளை ஆராய்வதற்காகவே அவர் இலங்கைக்கு வருகை தருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, மில்லியன் கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து ‘ஒப்பரேஷன் சாகர் பந்து’ நடவடிக்கையை ஆரம்பித்து, இந்தியா உடனடியாக இலங்கைக்கு ஆதரவளித்ததுடன் மனிதாபிமான உதவிகள், அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயத்தின் போது, அனர்த்தத்திற்குப் பின்னரான புனரமைப்புப் பணிகள், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் விஜயமானது இந்தியாவின் “அயலுறவுக்கு முதலிடம்” கொள்கை மற்றும் பகிரப்பட்ட கடல்சார் நலன்களைப் பிரதிபலிக்கும் வகையில், தொடர்ச்சியான புனரமைப்பு உதவிகள் மீது கவனம் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sagara Kariyavasam
பொலிஸ் மா அதிபருக்கு அச்சுறுத்தல்?: சாகர காரியவசமுக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பணியகம் நீதிமன்றில் மனு
Hikkaduwa Footwear
மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் இல்லை: ஹிக்கடுவை பாதணி நிறுவனம் பகிரங்க அறிக்கை!
easter attack
உயிர்த்த ஞாயிறு வழக்கு:மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு பாதுகாப்பு தீவிரம்!
srilanka weather
வானிலை மையத்தின் அவசர அறிவிப்பு: பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
basil rajapaksa
வழக்கில் முன்னிலையாகாத பசில்: அமெரிக்க நீதிமன்றம் மூலம் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை
Ananda Wijepala
சாகர காரியவசத்திற்கு அரசு கடும் எச்சரிக்கை: பொலிஸ்மா அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்ததால் பரபரப்பு!