இந்தியப் பெருங்கடலில் போர்க்கப்பல் மீதான தாக்குதல் – பதிலடிக்கு தயாராகும் ஈரான்

ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர்க்கப்பலான IRIS Dena மீது இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு “தகுந்த பதில் வழங்கப்படும்” என்று ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி (Amir Hatami) எச்சரித்துள்ளார்.

போர்ப் பயிற்சியை முடித்துவிட்டு மீண்டும் ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், நேரடிப் போரில் ஈடுபடாத நிலையில் தமது கடற்படையினர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், IRIS Dena கப்பலின் பெயரும் அதன் பணியாளர்களின் உயிர் தியாகமும், ஈரானிய கடற்படை வரலாற்றில் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக நிலைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஈரானின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் கடற்படை சக்தியை மேலும் பலப்படுத்துவதற்கும் உறுதியான தீர்மானத்துடன் செயற்படுவதாக ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி வலியுறுத்தினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

yala national park
யால சரணாலயத்தில் விதிகளை மீறி அட்டகாசம்: 5 சுற்றுலாப் பயணிகள் அதிரடி கைது!
vijay sangeetha divorce
தமிழக முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஓகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
batti news
வாழைச்சேனையில் விசித்திரம்: திருடிய மோட்டார் சைக்கிளை உரிய வீட்டிலேயே கொண்டு வந்து ஒப்படைத்த திருடர்கள்!
2019 easter attack
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அரசியல் தலைவர் விரைவில் கைது?
தமிழரசுக் கட்சி
தமிழரசுக் கட்சியில் வெடித்தது புதிய சர்ச்சை: யாழ் மாவட்ட புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிராக இளைஞர் அணித் தலைவர் கடிதம்!
சங்கீத்சன்
சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் பிணையில் விடுதலை!