அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்காக ஈரானிய தூதுக்குழு இன்று (09) பாகிஸ்தானுக்குப் பயணமாகவுள்ளதை அந்நாட்டுக்கான ஈரானிய தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று இரவு பாகிஸ்தானைச் சென்றடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் முன்வைத்துள்ள 10 அம்ச முன்மொழிவுகளின் அடிப்படையிலேயே இந்தப் பேச்சுவார்த்தைகள் அமையவுள்ளன. இதில் தடைகளை நீக்குதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான விவகாரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இஸ்ரேலினால் போர்நிறுத்தம் மீறப்படுவதாக ஈரான் குற்றம் சாட்டி வரும் நிலையிலும், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் அழைப்பினை ஏற்று இந்த இராஜதந்திர நகர்வு முன்னெடுக்கப்படுகிறது.
