லெபனானில் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் காயமடைந்த இலங்கை பெண்!

லெபனான் மீது நேற்று (08) இஸ்ரேல் நடத்திய பெரும் தொடர் தாக்குதல்களில் இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் உள்ள இலங்கைத்தூதரகம் இதனை அறிவித்துள்ளது.

குறித்த பெண் லேசான காயங்களுடன் தப்பியதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

லெபனான் மீது 10 நிமிடங்களுக்குள் இஸ்ரேல் நடத்திய பெரும் தொடர் தாக்குதல்களில் 254 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

மேலும்,1,165 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, “லெபனான் முழுவதும் இன்று அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் ஏற்பட்ட பேரழிவுகரமான மரணம் மற்றும் அழிவுகளால் நாங்கள் மிகுந்த சீற்றம் அடைந்துள்ளோம்” என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி
anura kumara
ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்
jaffna
யாழ். பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
Kapila Chandrasena
கபில சந்திரசேனவின் மரணம்: வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என தகவல்!
QR
எரிபொருள் QR குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
uk
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்