தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல இசை நிகழ்ச்சியான ‘சரிகமப’ மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்களான புருசோத்தமன் மற்றும் அக்சயா இன்று (02.06.2025) பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்தனர்.
இவர்களது வருகை, யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து சிறப்பிப்பதற்காக எனத் தெரிவிக்கப்படுகிறது. நிகழ்ச்சி குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புருசோத்தமன் மற்றும் அக்சயாவின் வருகையால் யாழ்ப்பாண இசைப் பார்வையாளர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.