கடூழியச் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாந்துவுக்கு, அவர்களது குடும்பத்தினர் அல்லது நெருங்கியவர்களை மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே சந்திக்கும் அனுமதி வழங்கப்படும் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு பொதுவாகப் பொருந்தும் விதிமுறைகளுக்கேற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே நேரத்தில் மூவருக்கு மாதத்தில் ஒருமுறை மட்டுமே சந்திப்பு அனுமதி வழங்கப்படுவது வழக்கமான நடைமுறையெனவும் சிறைச்சாலை ஆணையாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இருவரும் ஒரே பொதுவான இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
