இரண்டு நாட்களாக மட்டுமே பிறந்த தனது சிசுவை ரூ.75,000க்கு விற்க முயன்ற தாய் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஏழு ஆண்டு கடும் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயான குற்றவாளி, இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து நீதிபதி நவரத்ன மரசிங்க இந்த தீர்ப்பை இன்று(05) வழங்கினார்.
சிறைத்தண்டனைக்கு இணையாக, குற்றவாளிக்கு ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதனை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
