வெயாங்கொடை – நைவல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த மனித எச்சங்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
பையொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் பல எலும்புத் துண்டுகளை பொலிசார் மீடடுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டின் வாகனங்களை நிறுத்தும் இடத்தை ஒட்டிய ஒரு அறையில் கிராம அலுவலர் அலுவலகம் அமைந்திருந்தது.
இந்தநிலையில் கிராம அலுவலர், எலும்புக்கூடுகள் அடங்கிய பையைக் கவனித்து பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த நிலமானது, சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வைத்தியர் ஒருவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.
மேலும், அடையாளம் தெரியாத யாரோ ஒருவர் 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகளை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்
இந்த சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.