நாமலின் கிரிஷ் வழக்கு: உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ திட்ட ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை பெப்ரவரி 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (16.02.2026) நீதிமன்றப் பணிகளில் இருந்து விலக வழக்கறிஞர்கள் முடிவு செய்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பிரதிவாதியான நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலைகியிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வழக்கை பெப்ரவரி 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் ரக்பியை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான ‘கிரிஷ்’ நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறி, சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

colombo gun shoot
அக்குரேகொட இரட்டை கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்த சந்தேகநபர்கள்!
Rishad Bathiudeen
ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
dfsdfsd
Massive Protest Meeting in Kilinochchi Against Political Retaliation Targeting MP S. Shritharan
central bank of sri lanka
இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
gun shoot colombo
அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
vehicle import
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்!