நாமலின் திருமண கொண்டாட்டம்: ராஜபக்ச குடும்பத்துக்கு புதிய பிரச்சினை!

நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்வுக்காக 2019 இல் இலங்கை மின்சார சபையின் (CEB) மின்சாரம் தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சுமார் ரூ. 2 மில்லியன் மதிப்பிலான மின்சாரம், தனியார் இல்லம் ஒன்றில் நடந்த திருமண நிகழ்வுக்காக 1.5 கிலோமீற்றர் வீதியை ஒளிரவைத்ததற்காக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது அன்றைய மின்சார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் உத்தரவின்படியும், நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானகவின் வேண்டுகோளின்படியும் செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், திருமணத்துடன் தொடர்பில்லாத Royalco Aqua Culture (Pvt) Ltd எனும் தனியார் நிறுவனம் மின்சார கட்டணத்தைச் செலுத்தியதாகவும் செய்ததாகவும் தெரியவந்தது.

அதன்படி, மனுதாரர், இந்த செயல் அரசாங்க அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் என வாதிட்டுள்ளார்.

அத்தோடு, மின்சார சபையின் பிரதிநிதிகள், தங்களுக்கு கிடைத்த உத்தரவுகளை மட்டுமே பின்பற்றியதாகவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எந்த பற்றுச்சீட்டும் அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அரசியலமைப்பின் 12(1) ஆம் பிரிவின் கீழ் மனுவைத் தொடர அனுமதி வழங்கிய நீதிமன்றம், அடுத்த விசாரணையை 2026 மார்ச் 17 அன்று நடத்த தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் நாமல் ராஜபக்ச திருமண மின்சாரச் செலவினம் தொடர்பான வழக்கு சட்டரீதியாக முழுமையான விசாரணைக்கு நகர்ந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

power cut
நாடு முழுவதும் மின் தடை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
srilanka 2000 rupe
போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் பணமோசடி
Ranil in hospital
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்
vijay
போலி ‘likes’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்!
News
பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பினால் சட்ட நடவடிக்கை – அதிகபட்சம் ரூ.25,000 அபராதம்
newsss
“சாக போறேன்… சந்தோசமா?” – ஒரு மெசேஜில் முடிந்த புதுமண வாழ்க்கை!