“அறிவுறுத்தல்கள் எதுவும் கிடைக்கவில்லை” – கோட்டாபயவின் மனு தொடர்பாக நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தகவல்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக, சட்டமா அதிபர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்மனுதாரர்களிடம் இருந்து இதுவரையில் தமக்கு எந்தவிதமான அறிவுறுத்தல்களும் கிடைக்கப் பெறவில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைக் கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் தரப்பில் இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minister Nalinda Jayatissa
போராட்டங்களால் CID விசாரணைகளைத் தடுக்க முடியாது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
சுரேஷ் சலே
தீவிரம் அடையும் சுரேஷ் சலே விசாரணை: CID அதிகாரிகளை நேரில் முன்னிலையாக மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
kilinochchi
முறையற்ற மின் இணைப்பு உயிரைப் பறித்தது: கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் பலி!
court judgement
வங்கி கடனுக்காக மகனுக்கு மாற்றப்பட்ட வீடு: 30 வருடங்களின் பின் தாய்க்கு கிடைத்த நீதி!
sarana gunawardena
சரத் குணவர்தனவுக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை; கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
weather
மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!