நேற்றிரவு மதுபான போத்தலால் தலையில் தாக்கப்பட்டதால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவமானது இடம்பெற்றுள்ளது.

இதன்போது அதேபகுதியைச் சேர்ந்த எபிசியஸ் ஜெஸ்மன் (வயது 36) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு நண்பர்கள் அனைவரும் புதுமைமாதா ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து மது அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் மதுபான போத்தலினால் தாக்குதல் நடாத்தப்பட்டது.
இதன்போது, யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காயமடைந்தவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போது அவர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட அதே இடத்தைச் சேர்ந்த சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. விசாரணையின் பின்னர் அவரை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
