பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் செல்லக்கூடும்! வெளியான தகவல்

ஒப்பந்தம் கையெழுத்தானால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் நேரில் அல்லது காணொளி வாயிலாகக் கலந்துகொள்ளக்கூடும் என்று என்று Reuters செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் தரப்பைச் சேர்ந்த ஒரு வட்டாரத்தை மேற்கோள் காட்டி, நிலைகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன; பேச்சுவார்த்தை நாளை (புதன்கிழமை) நடைபெறும் பாதையில் உள்ளது” என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையிலான இரு வார தற்காலிக போர் நிறுத்தம் புதன்கிழமை முடிவடைய உள்ளது. இதை நீட்டிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என ட்ரம்ப் முன்பே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும், ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளது. இதேவேளை, கடந்த வார இறுதியில் அமெரிக்கா, ஹோர்மூஸ் அருகே ஈரான் கொடி ஏந்திய கப்பலை கைப்பற்றியதைத் தொடர்ந்து, தெஹ்ரான் ஆரம்பத்தில் பங்கேற்க மறுத்திருந்தது.

ஆனால், மூத்த ஈரான் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை “நன்மையான நோக்கில் ஆய்வு செய்து வருகிறது” என Reuters தெரிவித்துள்ளது.

இருப்பினும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இரு தரப்பும் நம்பிக்கை வெளிப்படுத்தினாலும், போர் நிறுத்தம் முடிவடையும் தருணத்தில் இன்னும் பல சவால்களும் உறுதியற்ற நிலையுமுள்ளது.

ட்ரம்ப், எண்ணெய் விலைகள் அதிகரிப்பதையும் பங்குச்சந்தை அதிர்ச்சிகளையும் தவிர்க்கும் வகையில் ஒப்பந்தம் வேண்டுமென விரும்புகிறார்.

அதே நேரத்தில், ஈரான் அணு ஆயுதம் உருவாக்கும் திறனை பெறக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.

மற்றொரு பக்கம், ஈரான், ஹோர்மூஸ் மீது தன் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, போர் மீண்டும் தொடங்காமல் தடுக்கும் மற்றும் தடைச்செயல்களை தளர்த்தும் ஒப்பந்தத்தை விரும்புகிறது. ஆனால், தனது அணு திட்டத்தில் எந்தக் கட்டுப்பாடும் வேண்டாம் எனக் கூறுகிறது.

ட்ரம்ப், தனது நிபந்தனைகளை ஏற்காவிட்டால், ஈரானில் உள்ள அனைத்து பாலங்களையும் மின்நிலையங்களையும் அழித்து விடுவோம் என எச்சரித்துள்ளார்.

இதற்கு பதிலாக, அமெரிக்கா தனது சிவில் கட்டமைப்புகளை தாக்கினால், கிழக்கு வளைகுடா நாடுகளில் உள்ள மின்நிலையங்களையும் நீர்வள உற்பத்தி நிலையங்களையும் தாக்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளது.

தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையிலான முக்கிய நடுவராக பாகிஸ்தான் உருவெடுத்துள்ளது. பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தாலும், அதனை நடத்த தயாராகியுள்ளது.

இஸ்லாமாபாத் முழுவதும் சுமார் 20,000 பாதுகாப்பு பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வேன்ஸ் ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய உள்ளார் என்று சில சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்