🔴 PHOTO தமிழரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவியுங்கள்.. யாழில் உண்ணாவிரதம்!

இலங்கை தமிழ் அரசு கட்சி மீதான வழக்குகளை மீளப்பெறக்கோரி கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் தெரிவை தொடர்ந்து ஏற்பட்ட சரச்சைகளை தொடர்ந்து, கட்சி உறுப்பினர்கள் சிலரால் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. வழக்கு தொடர்ந்தவர்கள் சுமந்திரன் அணியினர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

எனினும், பகிரங்க மேடைகளில் சுமந்திரன் அதை மறுத்து வருகிறார்.

இந்த நிலைமையில், கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் பிரதேசசபை உறுப்பினரான ஜீவராசா (ஜீவன்) என்பவர் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவிடத்தின் முன்பாக அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!