🔴 PHOTO குகையொன்றில் பிள்ளைகளுடன் எவருக்கும் தெரியாமல் வாழ்ந்த ரஷ்ய பெண்ணால் பரபரப்பு!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு குகையில் ரஷ்யப் பெண் ஒருவர் தனது 6 வயது மற்றும் 4 வயது மகள்களுடன் எவருக்கும் தெரியாமல் வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தெடார்பில் மேலும் தெரியவருவதாவது,

ரஷ்யாவைச் சேர்ந்த 40 வயதான நீனா குட்டினா என்பவர், தனது இரண்டு மகள்களுடன் வணிக விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் கோவாவில் சில நாட்கள் தங்கி இருந்த நிலையில், அதன்பின் கடற்கரை ஓரமாகவே பயணம் செய்து கர்நாடக மாநிலத்தில் உள்ள வனப்பகுதிக்கு வந்துள்ளார்.

அங்கு அவர் குகையில் தனது இரண்டு மகள்களுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும், முழுக்க முழுக்க இந்திய ஆன்மீக கலாசாரத்தை ஏற்றுக்கொண்டு தியானம் செய்து வந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் , அந்த பகுதிக்கு ரோந்து வந்த பொலிஸ்அதிகாரிகள், துணிகள் உலர்த்தப்பட்டதை பார்த்தவுடன், “மனித நடமாட்டமே இல்லாத இந்த பகுதிகளில் யார் இருக்கிறார்கள்” என்று பார்த்தபோது, குகையில் ரஷ்ய பெண்ணும் அவரது இரண்டு மகள்களும் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து, அவர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்களது விசா காலாவதி ஆகிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மூவரையும் அரசு மகளிர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

இதன் பின்னர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ரஷ்ய தூதரகத்தை தொடர்பு கொண்ட பொலிஸ் அதிகாரிகள், அவரையும் அவரது குழந்தைகளையும் பாதுகாப்பாக ரஷ்யா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

shritharan mp
"செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!" நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
buddhist monk arrested
அமெரிக்க பொலிஸாரின் 'ஒப்பரேஷன் ரெட் கார்ட்' அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!
Sugeeswara Bandara
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார கைது!
trincomalee
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய நிலத்தடி சிறைக்கு சீல் வைக்கப்படுகிறது!
Kankesanthurai Port
காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!
iran-us
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று கையெழுத்தாகிறது!