உத்தியோகபூர்வ இலக்கத்தகடு இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு எரிபொருள் பெற விசேட அறிவுறுத்தல்!

உத்தியோகபூர்வ வாகன இலக்கத்தகடு பெறாத வாகன உரிமையாளர்கள், எரிபொருள் நிரப்பும்போது தங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்காக வருமான வரி உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், காப்புறுதி அல்லது வாகனப் புகைப் பரிசோதனைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டுமென மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருள் விநியோகிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

கொள்முதல் நடவடிக்கைகளில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் கடந்த காலங்களில் உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகள் விநியோகிக்கப்படவில்லை.

இதன் காரணமாகச் சில வாகன உரிமையாளர்கள் பல்வேறு வகையான இலக்கத் தகடுகளைப் பயன்படுத்த முற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே, எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும்போது வாகனத்தின் அடையாளத்தைத் துல்லியமாக உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, தேவையான சந்தர்ப்பங்களில் குறித்த ஆவணங்களில் ஒன்றினைச் சமர்ப்பிக்குமாறு வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

shritharan mp
"செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!" நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
buddhist monk arrested
அமெரிக்க பொலிஸாரின் 'ஒப்பரேஷன் ரெட் கார்ட்' அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!
Sugeeswara Bandara
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார கைது!
trincomalee
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய நிலத்தடி சிறைக்கு சீல் வைக்கப்படுகிறது!
Kankesanthurai Port
காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!
iran-us
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று கையெழுத்தாகிறது!