தென்னிலங்கையின் பாணந்துறை ரயில் நிலையம் அருகே இன்று (05) காலை, சாகரிக்கா ரயிலில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை ஒரு பொதுமகன் தன் புத்திசாலித்தனத்தால் தடுத்து நிறுத்தியுள்ளார்.

சம்பவ இடத்தில் ரயில் பாதை உடைந்திருப்பதை அவதானித்த அந்த நபர், உடனடியாக தனது டி-ஷர்ட்டை கழற்றி அதை எடுத்துக் கொண்டு, ரயிலை நிறுத்தும் நோக்கில் முன்னோக்கி ஓடியுள்ளார்.
அவரது திடமான செயல்பாட்டின் காரணமாக ரயில் நிறுத்தப்பட்டு, ஒரு பெரும் விபத்தும் பல உயிரழப்புகளும் தவிர்க்கப்பட்டுள்ளன.
இந்த நபரின் துணிச்சலுக்கும் விழிப்புணர்விற்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
News – Accident 1st

