கட்டுப்பாட்டை இழந்த பேருந்து – 80 உயிர்களைக் காத்த சாரதி

தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, இன்று (26) அதிகாலை கினிகத்தேனை பகுதியில் பாரிய விபத்திலிருந்து நூலிழையில் தப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, கடவலை வளைவுப் பகுதியில் இப்பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அதன் தடையாளி (Brake) கட்டமைப்பு செயலிழந்துள்ளது.

பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சரிவில் இறங்கியபோது, வீதியோரமிருந்த மணல் மேடு ஒன்றின் மீது பேருந்தினை மோதச் செய்து சாமர்த்தியமாக நிறுத்தினார்.

சாரதியின் இந்த துரித மற்றும் சமயோசித செயலால் பேருந்து பள்ளத்தில் விழுவது தவிர்க்கப்பட்டு, அதிலிருந்த சுமார் 80 பயணிகள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர்.

விபத்தைத் தொடர்ந்து, பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் இணைந்து பயணிகளை மற்றுமொரு பேருந்தில் ஏற்றி தங்களது இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து கினிகத்தேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilanka weather
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி: 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை!
gotabaya rajapaksa
கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!
electricity bill
மின் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
mahaweli river
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை: பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!
Mahara Prison
போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம்? மஹர சிறைச்சாலையில் ரூ.15 கோடி சேதம் — அதிர்ச்சி தகவல்கள்!
Pujith Jayasundara
"அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்": பொலிஸ் உயர்மட்ட 'வாட்ஸ்அப்' உரையாடலில் வெளிவந்த தகவல்!