இலங்கைக்கு வந்த ஐரோப்பிய நாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி!

ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நிலையில் அவரை தாக்கிய குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விடுதியில் நடைபெற்ற விருந்தின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

சுற்றுலாவிற்காக தனது காதலனுடன் இலங்கைக்கு வந்திருந்த இளம் பெண், கற்பிட்டியின் கண்டகுளிய பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார்.

கடந்த 30 ஆம் திகதி இரவு வேறொரு ஹோட்டலில் நடைபெற்ற விருந்தில் குறித்த இளம் பெண் கலந்து கொண்டுள்ளார்.

சந்தேக நபர்கள் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாகவும், அவர் எதிர்த்தபோது அவரை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (02) கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கற்பிட்டி, கண்டகுளிய பகுதியை சேர்ந்த 23 மற்றும் 39 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் குறித்து கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!