நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பல் – இலங்கை மாலுமியை மீட்க அரசு தீவிரம்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எண்ணெய் கப்பலில் உள்ள இலங்கை மாலுமியை பாதுகாப்பாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எத்தியோப்பியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

சோமாலிய அதிகாரிகளுடன் இணைந்து, குறித்த இலங்கை மாலுமியை நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து கலந்துரையாடுமாறு எத்தியோப்பியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோமாலியாவின் புன்ட்லேண்ட் கடற்கரைக்கு அப்பால் குறித்த எரிபொருள் கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் கப்பலில் இலங்கையர் ஒருவருடன் பாகிஸ்தான், இந்தியா, இந்தோனேசியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாலுமிகளும் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கப்பலில் உள்ள பணியாளர்களுக்குக் காயம் ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும், சம்பவம் குறித்த மேலதிக உறுதியான தகவல்கள் அமைச்சுக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை. தற்போது குறித்த கப்பலுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, மாலுமிகளின் நிலைமையை மதிப்பிடுவதற்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
திருகோணமலையில் பிரசவத்தின் போது சிசு மரணம்: இரு வைத்தியர்கள் பணி இடைநீக்கம்!
vijay
மு.க. ஸ்டாலினைச் சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்: அதிரும் தமிழக அரசியல்!
may 18
நினைவுகளே எமது பேராயுதம்; தமிழ்த் தேசிய உணர்வே எமது பலம்: தமிழ் சிவில் சமூக அமையம் அறைகூவல்!
may 18
தமிழ் நாட்டு சட்டசபையில் மே 18ஐ முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக நிறைவேற்றுமாறு கோரிக்கை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
tvk
விசிக-வின் அதிரடி முடிவை நோக்கித் தமிழகம்! தமிழக அரசியல் களத்தில் இறுதி நிமிடப் பரபரப்பு!
vijay tvk
"பதவிக்காக யார் காலிலும் விழமாட்டேன்!"- அதிரடி முடிவெடுக்கிறாரா விஜய்? ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி!