இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி நிர்வாகத் தெரிவின் முறைகேடு அராஜகம் தொடர்பாக தொகுதியின் கட்சி உறுப்பினர்கள் சீற்றம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின்Vaddukoddaiத் தொகுதியின் முறைகேடான நிர்வாக தெரிவு தொடர்பாக வட்டுக்கோட்டைத் தொகுதியின் மூத்த கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட மூலக்கிளை உறுப்பினர்கள் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட கிளைத் தலைவர்/ செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள். இதன் பிரதிகள் மத்திய செயற்குழுவின் சகல உறுப்பினருக்கும் , கட்சியின் தலைவருக்கு ம் மத்திய செயற்குழுவில் இவ்விடயத்தை முன்னிலைப்படுத்தக் கோரியும் பிரதியிடப்பட்டுள்ளது.

 

யாப்புக்கு முரணாக வகையில் தொகுதி நிர்வாக தெரிவு இடம்பெற்றது. உரியவகையில்  முறைப்படி செயல்படுத்தவில்லை, மூலக்கிளையின் நிர்வாகிகளுக்கு உரிய அழைப்பு விடுக்கவில்லை. தமக்கு விரும்பிய உறுப்பினர்களுக்கு தொலைபேசி மூலம் அழைத்து கட்சியின் பதில் தலைமைகளால் கூட்டம் நடைபெற்று முறைகேடான முறையில் தெரிவு இடம்பெற்றது. இதனை ஆட்சேபித்து கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு உரிய விடயத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.

கூட்டம் முறைகேடான முறையில் இடம்பெற்றது என்பதற்கான உரிய ஆதாரங்கள் ஊடகங்களிலும் வெளிவந்த நிலையில் முறைகேடுகள் நடைபெற்றது, பிழையான வகையில் தெரிவு இடம்பெற்றது என்பதற்கு  ஆதாரமான சான்றிதழ் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

accident
மன்னார் பறயநாளன் குளம் பகுதியில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து: நால்வர் காயம்
gun shoot
கல்கிஸ்சையில் துப்பாக்கி இயங்காததால் நூலிழையில் உயிர்தப்பிய நபர்!
Ravindra Wijegunaratne
11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுதலை!
jaffna
சமகால அரசியல் மற்றும் செம்மணி புதைகுழி தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களுடன் தமிழ் பிரதிநிதிகள் கலந்துரையாடல்
chemmani protest
செம்மணி புதைகுழியை பார்வையிட வந்த ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழு!
suresh saleh
சுரேஷ் சலேவின் ரிட் மனு: மேலதிக பரிசீலனை ஜூலை 27-க்கு ஒத்திவைப்பு!