முச்சக்கரவண்டி ஓட்ட பந்தயம் : 11 பேர் கைது!

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் பணத்துக்காக முச்சக்கரவண்டி ஓட்ட பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டதாக ஜா – எல பொலிஸார் தெரிவித்தனர்.

ஜா – எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் தடுகம மற்றும் துடெல்ல ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 15 மற்றும் 16 வயதுடைய இருவரும் 20 முதல் 26 வயதுக்குட்பட்ட 9 பேரும் ஆவார்.

ஜா- எல, வத்தளை, கந்தானை, சீதுவை மற்றும் கணேமுல்ல ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 11 முச்சக்கரவண்டிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதலில் மூன்று முச்சக்கரவண்டிகள் ஓட்ட பந்தயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களின் பாதுகாப்புக்காக 8 முச்சக்கரவண்டிகள் பின்தொடர்ந்து சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட முச்சக்கரவண்டிகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

buddhist monk
மீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!
sri lankan girl death in chennai
சென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!
archuna ramanathan
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!
Harshana Nanayakkara
தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
mannar
சிறப்பாக இடம்பெற்று வரும் வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் - 2026!
actor ajith
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!