“திருகோணமலையிலுள்ள விகாரை முறையாக பதிவு செய்யப்பட்டது” ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அமரபுர மகா நிக்காயவின் தலைமை நாயக்க தேரர் கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி தேரர் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை 1951 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதாகவும், குறித்த விகாரை முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் விகாரை அமைந்துள்ள காணியின் உரிமை அப்போதைய ஜனாதிபதியால் வழங்கப்பட்ட மானியப்பத்திரத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருகோணமலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவம் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டும் எனவும் அமரபுர மகாநிக்காயவின் தலைமை தேரர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஆராயுமாறும் தலைமை தேரரால் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

shritharan mp
"செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!" நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
buddhist monk arrested
அமெரிக்க பொலிஸாரின் 'ஒப்பரேஷன் ரெட் கார்ட்' அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!
Sugeeswara Bandara
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார கைது!
trincomalee
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய நிலத்தடி சிறைக்கு சீல் வைக்கப்படுகிறது!
Kankesanthurai Port
காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!
iran-us
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று கையெழுத்தாகிறது!