வெள்ளவத்தை: ஐந்து மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து காவலாளர் உயிரிழப்பு

வெள்ளவத்தை இராமகிருஷ்ணா பிளேஸில் அமைந்துள்ள ஐந்து மாடி உயரமான கட்டிடத்தொன்றிலிருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய இராசையா தவராசா என்பவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், கடந்த மூன்று வருடங்களாக சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் வசிக்கும் ஒரு வர்த்தகரின் வீட்டில் காவலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இன்று (ஜூன் 4) காலை, மேல் மாடியில் உள்ள நடைபாதை அருகில் மர கைப்பிடியுடன் கூடிய சாதனத்தைப் பயன்படுத்தி யன்னல் அடைப்புகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தடுமாறி கீழே விழுந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
New Project t (1)
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள்: சி.ஐ.டியில் முறைப்பாடு!
New Project t
நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
varalakshmi-poojai
வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?
vavuniya-thump
அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு
New Project t (3)
இலங்கையிலுள்ள சீனர்களுக்கு சீனத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!