முல்லைத்தீவு மற்றும், மன்னார் தொடர்பில் தமிழ் எம்.பி யிடமிருந்து பிமல் ரத்நாயக்க பறந்த கடிதம்

முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவை உடனடியாக நிறுவ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுநிருவாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் விமல் ரத்நாயக்க ஆகியோரிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கைக் கடிதம் கையளித்துள்ளார். 

மேலும் கடந்த 17.06.2025 அன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், 

முல்லைத்தீவு மற்றும், மன்னார் மாவட்டங்களில் தீயணைப்புப் பிரிவை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் உரை நிகழ்த்தப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாகவே முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவை நிறுவ உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களான சந்தன அபேரத்ன, விமல் ரத்நாயக்க ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கைக் கடிதங்களைக் கையளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாலநாதன் சதீசன் 

Related Posts :

Special News :

Entertainment :

Special News

power cut
நாடு முழுவதும் மின் தடை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
srilanka 2000 rupe
போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் பணமோசடி
Ranil in hospital
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்
vijay
போலி ‘likes’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்!
News
பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பினால் சட்ட நடவடிக்கை – அதிகபட்சம் ரூ.25,000 அபராதம்
newsss
“சாக போறேன்… சந்தோசமா?” – ஒரு மெசேஜில் முடிந்த புதுமண வாழ்க்கை!