வதந்தி பரப்பியதாக அமீரகத்தில் 19 இந்தியர்கள் கைது: கடும் எச்சரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE), ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் குறித்த தவறான தகவல்களைப் பரப்பியதற்காக 19 இந்தியர்கள் உட்பட மொத்தம் 35 பேரை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளைத் தடுத்தபோது எடுக்கப்பட்ட உண்மையான வீடியோக்களைப் பகிர்ந்தது மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோக்களைப் பரப்பி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது ஆகியவையே இவர்களின் கைதுக்குக் காரணமாகும்.

இது போன்ற வதந்திகளைப் பரப்புபவர்களுக்குக் குறைந்தது ஒரு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் திர்ஹம் (சுமார் 23 லட்சம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என அமீரக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் பதிவிடும் முன் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

current bill
மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
iran
ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் - நீதவான் பிறப்பித்த அதிரடி உத்தரவு
food prices
இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகள்!
airport arrest
கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதான இரண்டு கனேடியர்கள்!
arrest
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது!
jaffna news
யாழில் கடந்த வருடத்தில் மாத்திரம் 62 கோடி ரூபாய் மோசடி - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை