வதந்தி பரப்பியதாக அமீரகத்தில் 19 இந்தியர்கள் கைது: கடும் எச்சரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE), ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் குறித்த தவறான தகவல்களைப் பரப்பியதற்காக 19 இந்தியர்கள் உட்பட மொத்தம் 35 பேரை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளைத் தடுத்தபோது எடுக்கப்பட்ட உண்மையான வீடியோக்களைப் பகிர்ந்தது மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோக்களைப் பரப்பி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது ஆகியவையே இவர்களின் கைதுக்குக் காரணமாகும்.

இது போன்ற வதந்திகளைப் பரப்புபவர்களுக்குக் குறைந்தது ஒரு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் திர்ஹம் (சுமார் 23 லட்சம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என அமீரக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் பதிவிடும் முன் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு!
Suresh Saleh
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!
iran
தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும்: அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
suriya movie shoot
கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!
MT Tifani
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!
vavuniya
வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!