மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் இல்லை: ஹிக்கடுவை பாதணி நிறுவனம் பகிரங்க அறிக்கை!

ஹிக்கடுவையில் தயாரிக்கப்பட்ட பாதணி ஒன்றில் “அல்லாஹ்” எனும் அரபு சொல் பொறிக்கப்பட்டதாக பரவிய சர்ச்சை குறித்து, சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் தனது உத்தியோகபூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.

ஹிக்கடுவையில் தயாரிக்கப்பட்ட பாதணி ஒன்றில் “அல்லாஹ்” எனும் அரபு எழுத்து பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அண்மையில் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது சம்பந்தப்பட்ட பாதணி தயாரிப்பு நிறுவனம் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

சர்ச்சைக்குரிய அந்தப் பாதணியின் வடிவமைப்பு, ‘Pinterest’ தளத்தில் பொதுவெளியில் கிடைக்கப்பெற்ற ஒரு கலை வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. எந்தவொரு மதத்தையோ, மதச் சின்னத்தையோ அல்லது ஒரு சமூகத்தின் மத உணர்வுகளையோ புண்படுத்தும் நோக்கம் தங்களுக்குத் துளியளவும் இல்லை.

இந்த வடிவமைப்பு மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கலாம் என்பதை உணர்ந்த உடனேயே, 24 மணி நேரத்திற்குள் அந்த வடிவமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மேலும், நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுவரும் பொய்யான மற்றும் அடிப்படையற்ற தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், அவதூறுகளைத் தொடர்ந்து பரப்புவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால் எவரேனும் மனவருத்தம் அடைந்திருந்தால் அதற்காகத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ள அந்நிறுவனம், எதிர்காலத்தில் மேலும் கூடுதலான பொறுப்புணர்வுடன் செயற்படுவதாக உறுதியளித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilanka weather
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி: 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை!
gotabaya rajapaksa
கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!
electricity bill
மின் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
mahaweli river
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை: பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!
Mahara Prison
போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம்? மஹர சிறைச்சாலையில் ரூ.15 கோடி சேதம் — அதிர்ச்சி தகவல்கள்!
Pujith Jayasundara
"அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்": பொலிஸ் உயர்மட்ட 'வாட்ஸ்அப்' உரையாடலில் வெளிவந்த தகவல்!