ஓஎல் பரீட்சையில் வடக்கு மாகாணம் கடைசி நிலைக்கு வந்தமை தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

  1. பெற்றோரின் கவனக்குறைவு
  2. பாடசாலையின் கவனக்குறைவு
  3. வெளிநாட்டு பணங்கள் அதிக புழக்கத்தில்
  4. போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு
  5. அரசியல் சூழ்நிலை
  6. இவை அனைத்தும்
  7. இவை அனைத்தும் இல்லை, வேறு காரணங்கள்

உங்கள் கமெண்ட் பேஸ்புக்குள் தெரிவிக்கவும்

வெளியாகிய சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் – மாகாண வாரியான சித்தி சதவீதங்கள் என்ன?

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 73.45% மாணவர்கள் உயர்தர வகுப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர் என பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். இதன்படி, மொத்தமாக 237,026 மாணவர்கள் உயர்தரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ தரங்களைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 13,392 ஆகும். இது மொத்த பரீட்சையில் பங்கேற்ற மாணவர்களில் 4.15% ஆகும்.

📍 மாகாண வாரியான சித்தி சதவீதங்கள்
மாகாணம் சதவீதம்
தெற்கு மாகாணம்75.64%
மேல் மாகாணம்74.47%
கிழக்கு மாகாணம்74.26%
மத்திய மாகாணம்73.91%
சப்ரகமுவ மாகாணம்73.47%
ஊவா மாகாணம்73.14%
வட மேல் மாகாணம்71.47%
வட மத்திய மாகாணம்70.24%
வடக்கு மாகாணம்69.86%
📚 பாட வாரியான சித்தி சதவீதங்கள்
பாடம் சதவீதம்
கிறிஸ்தவம்91.49%
கத்தோலிக்கம்90.22%
சிங்கள மொழி மற்றும் இலக்கியம்87.73%
தமிழ் மொழி மற்றும் இலக்கியம்87.03%
இஸ்லாம்85.45%
பௌத்தம்83.21%
சைவநெறி82.96%
வரலாறு82.17%
ஆங்கிலம்73.82%
அறிவியல்71.06%
கணிதம்69.07%

இதனுடன், எந்த ஒரு பாடத்திலும் சித்தி பெற முடியாத மாணவர்களின் சதவீதம் 2.34% ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு