ரஷ்ய ராணுவ தளத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட விமானங்களை தாக்கி அளித்ததுள்ளது
உக்ரைன், ரஷ்யா மீது இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சைபீரியாவின் ஸ்ரீட்னி கிராமத்தில் உள்ள ரஷ்ய ராணுவ தளத்தை நாசம் செய்துள்ளது.
இது ரஷ்ய எல்லையிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள பகுதியில் நடந்துள்ள முதல் தாக்குதல் என இர்குட்ஸ்க் மாநில ஆளுநர் உறுதி செய்துள்ளார்.
உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) திட்டமிட்டு நடத்திய ‘Pavutyna’ அல்லது ‘Web’ எனும் குறியீட்டுப் பெயரில் நடந்த இந்த சிறப்பு நடவடிக்கையில், 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ விமானங்கள் இலக்காக்கப்பட்டதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன
இனி சிவப்பு கோடுகள் இல்லை – புடினின் அவசர அறிக்கை வெளியிடப்பட்டது.
ரஷ்யாவின் மூலோபாய விமானப் போக்குவரத்து மீதான இன்றைய தாக்குதலுக்குப் பிறகு ஜனாதிபதி அவசரமாக ரஷ்ய குடிமக்களிடம் உரையாற்றினார்.
“இன்று, உக்ரைன் ரஷ்யாவின் மூலோபாய விமானப் போக்குவரத்து அமைந்துள்ள விமானநிலையங்களைத் தாக்கியது, இந்த சைகையால் அவர்கள் அமைதியான தீர்வு கிடைக்காது என்பதைக் காட்டினர்,
இன்றைய தாக்குதலின் மூலம் அவர்கள் தங்கள் சொந்த மரண உத்தரவில் கையெழுத்திட்டனர், இனி சிவப்பு கோடுகள் இல்லை, அவர்கள் வருத்தப்படுவார்கள்.
ரஷ்யாவில் வசிக்கும் அனைத்து மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்,
மேலும் ரஷ்ய விமானநிலையங்கள் மீதான இன்றைய வெட்கக்கேடான தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இதைப் புரிந்துகொண்டு நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நாங்கள் தொடங்குகிறோம்.
ஐந்து விமான நிலையத்திலும் 5 லாரிகளில் றோன்களை கொண்டு போய் வைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த அனைத்து றோன்களும் ரஷ்யாவுக்குள் நேரடியாகவே இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது பிந்திய செய்தி

