விபத்திற்குப் பின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்படவிருந்த முதல் விமானம் இரத்து!

அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி இன்று ( 17) புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப சிக்கலால் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இது, கடந்த வாரம் அகமதாபாத்தில் இடம்பெற்ற பேரழிவான விமான விபத்திற்குப் பிறகு, அதே நகரத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த முதலாவது விமானமாகும். எனவே, இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

விமானம் புறப்படவிருந்த நேரத்துக்கு முன், பராமரிப்பு பரிசோதனையின் போது Boeing 787-8 Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உடனடியாக விமானம் பயணத்திலிருந்து வாபஸ் பெறப்பட்டது.

இதனால் முன்பதிவு செய்திருந்த பயணிகள் இடர்பாடுகளை எதிர்கொண்டனர். ஏராளமான பயணிகள் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து விரக்தியடைந்தனர்.

இதேவேளை, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களைச் சேர்ந்த பல விமானங்கள் அண்மைக்காலமாக தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்