போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளின் போது காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பென்டகன் (Pentagon) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, தரைப்படை, வானூர்திப்படை, கடற்படை, மெரைன் படை உள்ளிட்ட நான்கு பிரிவுகளையும் சேர்ந்த 365 படையினர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரைப்படையைச் சேர்ந்த 247 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோன்று கடற்படையை சேர்ந்த 63 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

அதேபோன்று வானூர்திப்படையை சேர்ந்த 36 பேரும் மெரைன் படைப்பிரிவை சேர்ந்த 19 வீரர்களும் படுகாயமடைந்துள்ளனர் .

மேலும், இந்தப் போர் நடவடிக்கைகளின் காரணமாக இதுவரை 13 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் ஏற்பட்ட இழப்புகளே இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்