🔴 PHOTO மாவிட்ட புரத்தில் 35 வருடங்களுக்கு பின்னர் கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான பூர்வாங்க நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 06:00 மணிக்கு நடைபெற்றது.

கீரிமலை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து கீரிமலை – மாவிட்டபுரம் வீதி ஊடாக மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலுக்கு சகல உபச்சாரங்களுடன் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

உள்நாட்டு யுத்தம் காரணமாக இந்நிகழ்வு நடைபெறாத நிலையில் இம்முறை 35 வருடங்களின் பின் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 30ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து நடைபெற்று 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஜூலை மாதம் 23ஆம் திகதி அன்றும் மறுநாள் ஆடி அமாவாசை தினத்தன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!