விசேட சோதனை நடவடிக்கையின் போது பொலிஸ் பொறுப்பதிகாரியை மோதித் தள்ளிய வேன்!

விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துஷார சில்வா மீது ​​வேன் ஒன்று மோதியுள்ளது.

பாணந்துறை திசையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்தபோது, வஸ்கடுவ – வாடியமன்கட பகுதியில் நேற்று இரவு (22) இவ்வாறு ​​வேன் மோதியதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த பொலிஸ் பொறுப்பதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வேன் பொலிஸாரால் பொறுப்பேற்க்கப்பட்டுள்ளதுடன், சாரதி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!