ஜீப் வண்டிகள் சட்டவிரோதமாக இறக்குமதி – இருவர் கைது!

வாகன உரிம பத்திரம் இல்லாமல் மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவில் தரவு அமைப்பில் தவறான தரவுகளைப் பதிவு செய்து வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மெனிக்ஹின்ன பொலிஸ் பிரிவு மற்றும் வத்தேகம பொலிஸ் பிரிவில், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மெனிக்ஹின்ன மற்றும் வத்தேகம பகுதிகளைச் சேர்ந்த 38 மற்றும் 58 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை (13) தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாளை திங்கட்கிழமை (15) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!