ஜீப் வண்டிகள் சட்டவிரோதமாக இறக்குமதி – இருவர் கைது!

வாகன உரிம பத்திரம் இல்லாமல் மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவில் தரவு அமைப்பில் தவறான தரவுகளைப் பதிவு செய்து வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மெனிக்ஹின்ன பொலிஸ் பிரிவு மற்றும் வத்தேகம பொலிஸ் பிரிவில், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மெனிக்ஹின்ன மற்றும் வத்தேகம பகுதிகளைச் சேர்ந்த 38 மற்றும் 58 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை (13) தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாளை திங்கட்கிழமை (15) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

weather
சூறாவளியாக மாறும் காற்றழுத்தம்: வளிமண்டலவியல் திணைக்களம்
AL exam
2025 உயர்தரப் பரீட்சை: வெளியான முக்கிய அறிவிப்பு
Vignaraj Vakshan
தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழன்!
srilankans
வெளிநாடொன்றில் சிக்கிய இலங்கையர்கள்: வெளியான தகவல்!
gold price
ஏழு இலட்சம் வரை தங்கம் அதிகரிக்க வாய்ப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!
weather
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளஎச்சரிக்கை!