மருத்துவர்கள், சட்டத்தரணிகளின் வாகன அடையாள சின்னங்கள் தொடர்பில் அரசின் முடிவு!

அரச மருத்துவர்கள் மற்றும் சட்டத்தரணிகளின் வாகன அனுமதிச் சீட்டுகளை (Vehicle Passes) நீக்குவதற்கு அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மருத்துவர்கள் சிரமமின்றி வைத்தியசாலைக்குள் நுழைய இது உதவும் என்பதால், மருத்துவர்களின் வாகன அனுமதிச் சீட்டுகள் முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.

“மருத்துவர்களின் வாகன அனுமதிச் சீட்டு அவசர காலங்களில் மட்டுமல்ல, சாதாரண கடமைகளுக்காக வைத்தியசாலைக்குள் நுழையும் போதும் முக்கியமானது.

வைத்தியசாலைக்குள் நுழையும் பல வாகனங்களில் மருத்துவர்களின் வாகனங்களை வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியர்களால் அடையாளம் காண முடியாது. இந்த அனுமதிச் சீட்டுகள் மூலம் அவர்கள் இலகுவாக அவ்வாறு அடையாளம் காணலாம்” என்று அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மருத்துவர்கள் மற்றும் சட்டத்தரணிகளின் வாகன அனுமதிச் சீட்டுகளை நீக்குவது குறித்து காவல்துறையோ அல்லது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களமோ எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Karu Jayasuriya
முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம்!
docter
மக்களை ஏமாற்றிவந்த போலி மருத்துவர்: சுற்றி வளைத்த அதிகாரிகள்
t20
யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!
colombo
இவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் உடனே அழையுங்கள்!
Singer S
பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார்!
vairamuthu
கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு!