மருத்துவர்கள், சட்டத்தரணிகளின் வாகன அடையாள சின்னங்கள் தொடர்பில் அரசின் முடிவு!

அரச மருத்துவர்கள் மற்றும் சட்டத்தரணிகளின் வாகன அனுமதிச் சீட்டுகளை (Vehicle Passes) நீக்குவதற்கு அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மருத்துவர்கள் சிரமமின்றி வைத்தியசாலைக்குள் நுழைய இது உதவும் என்பதால், மருத்துவர்களின் வாகன அனுமதிச் சீட்டுகள் முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.

“மருத்துவர்களின் வாகன அனுமதிச் சீட்டு அவசர காலங்களில் மட்டுமல்ல, சாதாரண கடமைகளுக்காக வைத்தியசாலைக்குள் நுழையும் போதும் முக்கியமானது.

வைத்தியசாலைக்குள் நுழையும் பல வாகனங்களில் மருத்துவர்களின் வாகனங்களை வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியர்களால் அடையாளம் காண முடியாது. இந்த அனுமதிச் சீட்டுகள் மூலம் அவர்கள் இலகுவாக அவ்வாறு அடையாளம் காணலாம்” என்று அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மருத்துவர்கள் மற்றும் சட்டத்தரணிகளின் வாகன அனுமதிச் சீட்டுகளை நீக்குவது குறித்து காவல்துறையோ அல்லது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களமோ எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

current bill
மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
iran
ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் - நீதவான் பிறப்பித்த அதிரடி உத்தரவு
food prices
இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகள்!
airport arrest
கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதான இரண்டு கனேடியர்கள்!
arrest
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது!
jaffna news
யாழில் கடந்த வருடத்தில் மாத்திரம் 62 கோடி ரூபாய் மோசடி - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை