கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான செயற்பாடுகள்: கவலைகளை எழுப்பியது இலங்கை

கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தொடர்பான சின்னங்களை பொதுவெளியில் பயன்படுத்துவது மற்றும் பிரிவினைவாதச் சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் குறித்து கனேடிய அரசாங்கத்திடம் இலங்கை தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கேத்ரின் மார்ட்டின் உடனான சந்திப்பில் இந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

கனடாவில் உள்ள உள்ளூர் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க முயற்சிகளை பலவீனப்படுத்துவதாகவும், கட்டுப்படுத்தப்படா விட்டால் இருதரப்பு உறவுகளைப் பாதிக்கலாம் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர், தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போதும் கனடாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்றும், அதன் சின்னங்களையோ அல்லது பிரிவினைவாத சித்தாந்தங்களையோ கனேடிய மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், கனடா எப்போதும் இலங்கையின் இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆதரவாக உள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!