அஷோக ரன்வலவின் மருத்துவ அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

விபத்துக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வலவின் மருத்துவ அறிக்கை இதுவரை பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறுகிறார்.

கடந்த வியாழக்கிழமை இரவு பாராளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வல செலுத்திச் சென்ற ஜீப் வண்டி, மற்றுமொரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் காரில் பயணித்த சிறு குழந்தை உட்பட மூவர் காயமடைந்தனர்.

எவ்வாறாயினும், விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வல கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு!
Suresh Saleh
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!
iran
தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும்: அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
suriya movie shoot
கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!
MT Tifani
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!
vavuniya
வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!