இலங்கையில் பிறந்து சுவிட்சர்லாந்தை ஆளும் பெண்!

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பரா ரூமி, சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் 2ஆவது துணைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி அன்று கொழும்பில் பிறந்த இவர், தனது 6 ஆவது வயதில் பெற்றோருடன் சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்து, தாதியர் சேவையில் பட்டமும் பெற்றுள்ளார்.

2021 ஆம் ஆண்டு (Solothurn) மாநில கண்டோனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 2023 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இதன் மூலம் சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவான முதல் இலங்கை வம்சாவளி நபர் என்ற பெருமையைப் பெற்றார்.

தனது புதிய பதவி குறித்து பரா ரூமி,

”எனது புதிய பதவியில் தேசிய கவுன்சிலின் துணைத் தலைவராக நான் ஒவ்வொரு நாளும் புதிய அறிவுகளைப் பெறுகிறேன். ஜனாதிபதி இல்லாத நிலையில் 2 முறை கவுன்சிலை வழிநடத்த எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரு கடினமான மற்றும் பொறுப்பான பணி. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Qatar
கத்தார் எரிவாயு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 54 பேர் காயம், 18 தொழிலாளர்களைக் காணவில்லை!
Singer Sathyan
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன்!
Suresh Saleh
பிள்ளைகளைப் பின்தொடர்ந்து வீடியோ எடுக்க முயற்சி: பாதுகாப்பு கோரும் சுரேஷ் சலேயின் மனைவி
us-iran-swiss
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சுவிட்சர்லாந்தில் முதலாம் நாள் அமர்வு நிறைவு!
protest london
லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக தமிழர்கள் போராட்டம்
NEWS
நயினாதீவு கடலில் பலியான அதிபரின் மகன் 9A சித்தி பெற்று சாதனை!