சிங்கள மொழியில் கலந்துரையாடல்: சீற்றமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை (26) அன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்தில் நீண்ட நேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்கள மொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் சீற்றமடைந்து சபையில் எழுந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய முறையற்ற செயற்பாட்டிற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

குறித்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர்களில் பெருமளவானவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இவ்வாறு முறையற்ற விதத்தில் மொழிபெயர்ப்பின்றி நீண்ட நேரமாக சிங்கள மொழியில் கலந்துரையாடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

அத்தோடு தமிழ் மொழி மூலமான மொழிபெயர்ப்பையும் அவர் கோரியதையடுத்து குறித்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தமிழ் மொழி மூலமான மொழிபெயர்ப்புக்களுடன் சீராக கலந்துரையாடல்கள் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!