மின்கம்பத்தில்  மோட்டார் சைக்கிள் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு!

அம்பாறை  உஹன பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சமன பெத்த பிரிவேனா அருகே மோட்டார் சைக்கிள்  வீதியை  விட்டு விலகி உயர் மின்னழுத்த மின்கம்பத்தில்    மோட்டார் சைக்கிள் செலுத்தியவர்  உயிரிழந்தார்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (25) மதியம்  இடம்பெற்றுள்ளதுடன்  குறித்த விபத்தில் காயமடைந்தவர் மற்றுமொரு  வாகனத்தில் அம்பாறை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர்  இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு முகாமில் பணியாற்றும், 22 வயதுடைய  ஆர்.எச். உதிக மலிந்த ரணசிங்க என்ற இராணுவ வீரர் ஆவார்.

குறித்த இராணுவ  வீரர் விடுமுறையில் பொலன்னறுவைக்குச் சென்று பின்னர்  மஹியங்கனையில் உள்ள தனது பாட்டியைப் பார்த்துவிட்டு அம்பாறை  பொல்வத்தைக்குத் செல்லும் வழியில் விபத்திற்குள்ளாகியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் அம்பாறை மாவட்ட   பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் அறிவுறுத்தலின் பேரில் உஹன பிரிவுக்குப் பொறுப்பானவிற்கான  உதவி பொலிஸ் அத்தியட்சகர்  டி.எம். திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ்  உஹன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சுமித் குணவர்தன உள்ளிட்ட போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!