விபத்துக்குள்ளான ஈரான் கப்பல்! மீட்கப்பட்டோர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து சுமார் 30 பேர் இதுவரை இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏனையவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது கடற்படையினரால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (04) உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்,

ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான “ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா” என்ற கப்பலில் சுமார் 180 பணியாட்கள் இருந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற போது கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் இருக்க வில்லை. கப்பல் மூழ்குவதாக கடற்படைக்கு வந்த அனர்த்த அழைப்பின் அடிப்படையில், மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையின் விசேட மீட்புப் படகுகள் மற்றும் உலங்குவானூர்திகள் இந்த நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Namal and Mahinda
"18ஆவது திருத்தம் நாங்கள் செய்த தவறு; அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்!" - நாமல் ராஜபக்ச
police arrest
தெஹிவளை உணவகக் கொள்ளை: முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்குக் கடூழிய சிறை!
negombo prison
தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: நீர்கொழும்பு சிறை அதிகாரி சாட்சியத்தை வெளியிட நீதிமன்றம் தடை!
telegram
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
accident
A9 வீதியில் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி: இரு இளைஞர்களின் உயிரைப் பறித்த சோகம்!
pillayan
'பிள்ளையான்' தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு: விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு!