மீண்டெழும் இலங்கை: அந்நியச் செலாவணி கையிருப்பில் அதிரடி உயர்வு!

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 7,000 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.

அண்மைக்கால தரவு அறிக்கைகளின்படி, 2026 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 7,284 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்டது.

இது 2026 ஜனவரி மாதத்தில் காணப்பட்ட 6,832 மில்லியன் டொலர் கையிருப்புடன் ஒப்பிடுகையில் 6.6 சதவீத அதிகரிப்பாகும்.

கையிருப்புகளில் முக்கிய அங்கமான வெளிநாட்டு செலாவணி கையிருப்பு, 2026 பெப்ரவரி மாதத்தில் 6,687 மில்லியன் டொலர்களிலிருந்து 7,057 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியிடமுள்ள தங்க கையிருப்பு 2026 பெப்ரவரி மாதத்தில் 109 மில்லியன் டொலர்களிலிருந்து 200 மில்லியன் டொலர்கள் வரை 83.4 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடைந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!