யாழ் நோக்கி படையெடுக்கும் தென்பகுதி கண் நோயாளர்கள்!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கண் நோயியல் பிரிவுக்கு, தென் பகுதிகளுக்கு வழங்கப்படும் வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் பகுதியிலிருந்து, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு, கண்நோய் தொடர்பில் சிகிச்சைகளுக்கு செல்லும் நோயாளர்களால், ஜனாதிபதிக்கு இந்த விடயம் தொடர்பில் கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கண் வெண்திறை நீக்கத்துக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில், இதற்கான சத்திரசிகிச்சைகள் உரியமுறையில் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, கண்டி, மாத்தளை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும், யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு, கண் சிகிச்சைகளுக்காக பெருமளவானோர் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண் நோயியல் விசேட நிபுணர் எஸ்.மலரவன் தலைமையிலான மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவமனை பணியாளர்கள், தங்களுக்கான சிகிச்சைகளை உரியவாறு வழங்குவதாகவும், தென்பகுதி நோயாளர்கள் கூறியுள்ளனர்.

தென் பகுதியில் அதிக செலவில் கண் நோய் தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்படுகின்ற போதிலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் முற்றுமுழுதாக இலவச சேவைகள் வழங்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கண் நோய் சிகிச்சைப் பிரிவுக்கு தேவையான மேலதிக வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
கிளிநொச்சியில் இளம் கலைஞர் கைது: அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் நாமல் ராஜபக்ஷ!
vavuniya
மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: வவுனியா 'சிறுவர் பாதாளக் குழு' சிக்கியது! 7 பேருக்கு நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!
arrest
எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது!
vavuniya accident
கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
chennai srilankan girl death
சென்னை கோயம்பேடு கொடூரம்: காரில் மோதி இலங்கை பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியும் பலி
gotabaya rajapaksa
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை